இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன்.. என்னைப் பின்தொடர்ந்து வந்தால் என் காதலர்களை* உமக்கு காட்டுவேன்.. நீரே பார்த்து தெரிந்து கொள்ளும்… **
பகல் பொழுதில் பிரம்மாண்டமாய் பரந்து விரிந்திருக்கும் கடலை விட இரவின் ஆட்சியில் துயில் கொள்ளும் கடல் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது! கூட்டுக்கு செல்லும் பறவையை போல விரைந்து செல்லாமல் பள்ளி செல்லும் குழந்தை போல மெல்லிய சிணுங்கல்களுடன் சூரியன் அசைந்து செல்லும் அழகையும் குழந்தைகளின் வருகையை எதிர்பார்த்து, கண்டதும் இரு கரம் நீட்டி தழுவிட துடிக்கும் அன்னையை போல் தோற்றம் காட்டும் கடல் அன்னையையும் காண உடம்பெல்லாம் கண்களாக பெற்றிந்தாலும் போதாது!
சிறு வயதில் குடும்பத்துடன் கடல் பார்க்க செல்வதே ஒரு சுகானுபவம்! கடலுக்கு அந்த பக்கம் என்னமா இருக்கு? என்ற கேள்விக்கு அம்மா சொன்ன ‘ஸ்ரீலங்கா இருக்கு மா’ என்ற பதில் என்னை மிகவும் உவகை கொள்ள செய்த பதில்களுள் ஒன்று (’வீட்டுக்கு போகும்போது ஐஸ்க்ரீம் வாங்கி தரேன்’ மட்டொன்று) !!) அலைகள் காலை தழுவும்படி நின்று அந்த பக்கம் இலங்கை மக்கள் எவரும் தென்படுகின்றனரா என்று பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமான பொழுதுபோக்கு! தந்தையிடம் ஒரு நாள் பயணமாக லங்கா செல்லலாமா என கேட்டபோது ஏன் எல்லாரும் இப்டி மடத்தனமா சிரிக்கறாங்க என்று மிகுந்த கோவம் வந்தது! வளர்ந்த பின்பும் ‘அந்த பக்கம் ஸ்ரீலங்கா இருக்கு.. ரொம்ப பக்கம் தான்’ என்ற எண்ணத்தை என்னால் மாற்றி கொள்ள முடியவில்லை!
என் காதலர்களை காட்டுவேன் என்றா சொன்னேன்? மன்னிக்கவும்! காது எனும் கருவியை மட்டும் உபயோகித்தால் போதும். அவர்களில் இருப்பை நீங்கள் உணரலாம்..
கடல் பார்த்தலை விட அருமையானது எது தெரியுமா? கடல் ஓசை கேட்டள்! வீட்டு மொட்டை மாடியில் நடந்தபடி சற்று தொலைவில் ஒலிக்கும் கடலோசயுடன் அளவளாவும் சுகத்தை என்னென்று சொல்வது? கடல் தன்னுடைய அலை ஓசையின் வாயிலாக தினந்தோறும் நம்முடன் பல நூறு கதைகள் பேசிக்கொண்டு தான் இருக்கிறது! கடலே பல அலை குழந்தைகளாக பிரிந்து யார் முதலில் கரையை தொடுவது என போட்டியிட்டு இறுதியில் கரையை தொடும் முதல் அலைக்கு ஏனைய அனைத்தும் கொடுக்கும் ஆரவார உற்சாகம் தானோ அலையோசை.. வென்ற அலையை விட பின் தங்கிய அலைகளின் கூச்சல் அதிகம் இருப்பது அந்த உற்சாகாப்படுத்துதலினால் கிடைக்கும் மன நிறைவினால் தானோ? யாமறியோம் பராபரமே!! மழை நாட்களில் பொங்கி வரும் அலை ஓசையை கேட்கும் வாய்ப்பு என்றாவது கிடைத்திருக்கிறதா? மழை தோழிக்கு காதல் கொடுக்கும் அற்புதமான வரவேற்பு முறசொலி அன்றோ அது!!
அடடா.. நேரமாகிவிட்டது.. சென்று வருகிறேன் என் அன்பர்களே..
ஆம்!! நான் பூங்குழலி அல்லவேl! எம் தந்தையும் தியாகவிடங்க கரையர் அல்லர்l! என் இஷ்டம் போல் நள்ளிரவில் சமுத்திரத்தை ஆள்வதற்கும் என் காதலர்களை சந்திப்பதற்கும்!!
மீண்டும் சந்திப்போம்..
*Will-o’-the-wisp
** பொன்னியின் செல்வனில் இருந்து..
Tuesday, May 19, 2009
Tuesday, March 31, 2009
Non-Stop Nonsense!

WTH! Two of my close friends are in trouble because of their girl friends! Now don’t think that I’m too free to
hear to all those daily date- stories and their petty fights with their so-and-so’s. But these are somewhat serious matters (to them) which give them sleepless nights, bad office hours with no peace of mind! Not only I feel irritated and ashamed if a girl’s been insulted/teased by the opposite gender but my blood equally boils seeing/hearing of the assaulted men.


I have the wildest dreams of working in a juice shop (what do you want sir? Apple juice? Cuts the apples into


For a change – Mothers these days!! :D
மகாகவி மன்னிக்க!!!!
21.3.2009 12:30AM
அவள்: ஹாய் மாம்ஸ்!!! இன்னைக்கும் லேட்டா ? சரி… நாளைக்கு எத்தன மணிக்கு?
அவன்: ??!! எது எத்தன மணிக்கு?
அவள்: அதுக்குள்ள மறந்துடீங்களா? கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா உங்களுக்கு? ஆபீஸ் வேலைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த வீட்ல ஒரு விஷயம்னா கொடுக்றீங்களா?
அவன்: என்ன டா பண்றது? வேல போட்டு புழியறாங்க! இன்னைக்கு வேற ஒருத்தன் எழுதுன java codeல ஒரு error! அத நான் trace பண்ண…..
அவள்: சும்மா வளவளனு பேசாதீங்க! இப்டியே பேசிக்கிட்டு இருந்தா தூங்க நேரம் ஆகிடும்! அப்புறம் நாளைக்கு காலைல எழுந்துக்க late ஆகி, கிளம்பவும் late ஆகிடும்! அத்தைகிட்ட டோஸ் தான் கெடைக்கும்! சீக்கிரமா 7 மணிக்கு alarm வச்சிட்டு தூங்குங்க!
அவன்: 7 மணிக்கா? 8 மணிக்கு taxi வர சொல்லிருக்கேன் di!
அவள்: ஓ 8 மணிக்கு தான் வருமா? அப்டினா ஒரு 7:30 க்கு என்ன எழுப்புங்க! குளிச்சிட்டு கெளம்ப சரியா இருக்கும்!
அவன்: (மனதுக்குள்) அப்ப என் breakfast??
21.3.2009 7:15AM
அவனுடைய அம்மா: என்ன ரெண்டு பெரும் சும்மா உக்காந்துகிட்டு இருக்கீங்க? போய் குளிச்சிட்டு கெளம்புங்க! நேரம் ஆகிட்டே போகுதுல..
அந்த வீட்டின் தொலைக்காட்சிக்கு கூட அவர்களின் அவசரம் புரிந்தது போல அந்த காலை வேளையில் remix பாடல்களை வேகமாய் இசைத்து கொண்டிருந்தது! அவன்-டிக்-அவள்-டிக்-அம்மா-டிக் என கடிகாரத்தை மைய படுத்தியே அவர்களின் காலை நேரமும் கால் சக்கரமும் சுழன்றுகொண்டிருந்தது!
அவள் : <பல்லை கடித்து கொண்டு> என்னங்க! மணிய பாருங்க 7:50 ஆகிடுச்சு! எங்கயாச்சும் time mgmt பத்தி தெரிஞ்சிருக்கா உங்களுக்கு! இத பத்தி meenaks ஒரு post போட்டிருந்தார் பாருங்க.. அதுல….
அவன்: சரி சரி குளிக்க போய்டேன்!
<காக்கை குளியல் முடித்து திரும்பியதும்> (no pun intended :P)
அவன்: என்ன இது இன்னும் வண்டிய காணோமே! <பேசியில் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு காரமாக திரும்பி> அறிவு கெட்ட பசங்க! 8 மணிக்கு வர சொன்னா, வீடு தெரியல sir 10 நிமிஷம்னு சொல்றாங்க!
அம்மா: நம்ம அவசரத்த புரிஞ்சுக்க மாட்டாங்களே!
21.3.2009 8:20AM
Driver: சாரி சார்!! அட்ரஸ் கண்டுபுடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா போச்சு! Royapettah தான?
அவன்: பரவால்லங்க! கொஞ்சம் சீக்ரமா கொண்டும் போய் சேத்துடீங்கனா போதும்!
அம்மா: ச்சே .. இன்னும் கொஞ்சம் முன்னாடி கெளம்பிருக்கலாம்! சனிக்கெழம கூட ஆபீஸ்லாம் இருக்குமா மா? வெளில முக்கியமா போனும்னா கூட முடியாது போலருக்கே!!
அவள்: ஆமா அம்மா! Leave நாளுல அவசரமா போகனும்னா கூட முடிய மாட்டுது! Time ஆகிட்டே போகுதே!
அவன்: Alwarpet போய் சுத்தி போனா நேரமாகிடும்! அப்டியே Gemini flyoverஅ புடிங்க!
Driver: சரிங்க சார்!! Royapettahல எங்க?
அவன்: சத்யம் தியேட்டர் (என்று கூறி டிரைவர் பக்கம் திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்)!!
ஹிஹி!!! இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை சம்பவமே!! :P
அவள்: ஹாய் மாம்ஸ்!!! இன்னைக்கும் லேட்டா ? சரி… நாளைக்கு எத்தன மணிக்கு?
அவன்: ??!! எது எத்தன மணிக்கு?
அவள்: அதுக்குள்ள மறந்துடீங்களா? கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா உங்களுக்கு? ஆபீஸ் வேலைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த வீட்ல ஒரு விஷயம்னா கொடுக்றீங்களா?
அவன்: என்ன டா பண்றது? வேல போட்டு புழியறாங்க! இன்னைக்கு வேற ஒருத்தன் எழுதுன java codeல ஒரு error! அத நான் trace பண்ண…..
அவள்: சும்மா வளவளனு பேசாதீங்க! இப்டியே பேசிக்கிட்டு இருந்தா தூங்க நேரம் ஆகிடும்! அப்புறம் நாளைக்கு காலைல எழுந்துக்க late ஆகி, கிளம்பவும் late ஆகிடும்! அத்தைகிட்ட டோஸ் தான் கெடைக்கும்! சீக்கிரமா 7 மணிக்கு alarm வச்சிட்டு தூங்குங்க!
அவன்: 7 மணிக்கா? 8 மணிக்கு taxi வர சொல்லிருக்கேன் di!
அவள்: ஓ 8 மணிக்கு தான் வருமா? அப்டினா ஒரு 7:30 க்கு என்ன எழுப்புங்க! குளிச்சிட்டு கெளம்ப சரியா இருக்கும்!
அவன்: (மனதுக்குள்) அப்ப என் breakfast??
21.3.2009 7:15AM
அவனுடைய அம்மா: என்ன ரெண்டு பெரும் சும்மா உக்காந்துகிட்டு இருக்கீங்க? போய் குளிச்சிட்டு கெளம்புங்க! நேரம் ஆகிட்டே போகுதுல..
அந்த வீட்டின் தொலைக்காட்சிக்கு கூட அவர்களின் அவசரம் புரிந்தது போல அந்த காலை வேளையில் remix பாடல்களை வேகமாய் இசைத்து கொண்டிருந்தது! அவன்-டிக்-அவள்-டிக்-அம்மா-டிக் என கடிகாரத்தை மைய படுத்தியே அவர்களின் காலை நேரமும் கால் சக்கரமும் சுழன்றுகொண்டிருந்தது!
அவள் : <பல்லை கடித்து கொண்டு> என்னங்க! மணிய பாருங்க 7:50 ஆகிடுச்சு! எங்கயாச்சும் time mgmt பத்தி தெரிஞ்சிருக்கா உங்களுக்கு! இத பத்தி meenaks ஒரு post போட்டிருந்தார் பாருங்க.. அதுல….
அவன்: சரி சரி குளிக்க போய்டேன்!
<காக்கை குளியல் முடித்து திரும்பியதும்> (no pun intended :P)
அவன்: என்ன இது இன்னும் வண்டிய காணோமே! <பேசியில் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு காரமாக திரும்பி> அறிவு கெட்ட பசங்க! 8 மணிக்கு வர சொன்னா, வீடு தெரியல sir 10 நிமிஷம்னு சொல்றாங்க!
அம்மா: நம்ம அவசரத்த புரிஞ்சுக்க மாட்டாங்களே!
21.3.2009 8:20AM
Driver: சாரி சார்!! அட்ரஸ் கண்டுபுடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா போச்சு! Royapettah தான?
அவன்: பரவால்லங்க! கொஞ்சம் சீக்ரமா கொண்டும் போய் சேத்துடீங்கனா போதும்!
அம்மா: ச்சே .. இன்னும் கொஞ்சம் முன்னாடி கெளம்பிருக்கலாம்! சனிக்கெழம கூட ஆபீஸ்லாம் இருக்குமா மா? வெளில முக்கியமா போனும்னா கூட முடியாது போலருக்கே!!
அவள்: ஆமா அம்மா! Leave நாளுல அவசரமா போகனும்னா கூட முடிய மாட்டுது! Time ஆகிட்டே போகுதே!
அவன்: Alwarpet போய் சுத்தி போனா நேரமாகிடும்! அப்டியே Gemini flyoverஅ புடிங்க!
Driver: சரிங்க சார்!! Royapettahல எங்க?
அவன்: சத்யம் தியேட்டர் (என்று கூறி டிரைவர் பக்கம் திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்)!!
ஹிஹி!!! இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை சம்பவமே!! :P
Friday, February 13, 2009
Love?? Sheesh!!
Neither had I hit girls at pubs
Nor I declared marry or Rakhi
No sarees I sent for chaddis
But yes I hollered – Love?? Sheeshhh!!

All the guys turned annoyed
As I was the master of advices.
For girls who get into embarrassments,
I was there for detachments

No failures in the past
No experience of being lost;
Still I managed to shrug
And aver – It’s nothing but a drug!

Then came you, the chameleon
To prove me that I was wrong.
Showered me with all forms of love
Those all in my family and friends give!

As a gentle breeze you crossed my life
It’s not my life but yours, I cried.
My memories always were about you
Day or night they didn’t have a clue!

Love was the last word I trusted
And marriage was the last but one;
Both the words got committed
Oh my! Now am caught red handed!!

Wish you all a very happy Valentines Day!!
Nor I declared marry or Rakhi
No sarees I sent for chaddis
But yes I hollered – Love?? Sheeshhh!!

All the guys turned annoyed
As I was the master of advices.
For girls who get into embarrassments,
I was there for detachments

No failures in the past
No experience of being lost;
Still I managed to shrug
And aver – It’s nothing but a drug!

Then came you, the chameleon
To prove me that I was wrong.
Showered me with all forms of love
Those all in my family and friends give!

As a gentle breeze you crossed my life
It’s not my life but yours, I cried.
My memories always were about you
Day or night they didn’t have a clue!

Love was the last word I trusted
And marriage was the last but one;
Both the words got committed
Oh my! Now am caught red handed!!
Wish you all a very happy Valentines Day!!
Labels:
ms.muthalik,
my dear valentine,
not my story,
v-day
Wednesday, February 4, 2009
[புத்தக மதிப்புரை] மின்சார பூ & கிறுகிறுவானம்

கிராமங்களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. சில பொழுதுகளில் அவை மந்தகாசமான மணத்துடனும் மற்றும் பல நாட்களில் பாலையின் தகிப்பு அங்குள்ள செடி கொடி முதல் மக்கள் மனங்கள் வரை நிறைந்திருக்கும் வண்ணமும் அமையப்பெற்றிருக்கும்!
சிற்றூர்களில் வசிக்கும் மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் இயல்பான நடையில் வாசகர்களை சென்றடையும் வகையில் எழுதுபவர்களில் முக்கியமானவர் மேலாண்மை பொன்னுசாமி! அவரின் கதைகளை படிக்கையில் அந்த கந்தக பூமியின் வெப்பத்தையும் கள்ளமில்லா மனிதர்களின் சுபாவத்தையும், மிருக மனம் கொண்டோரின் நிதர்சனங்களையும் அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வே எஞ்சி நிற்கும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மின்சார பூ என்ற தொகுப்பு பல சிறுகதைகளை உள்ளடக்கியது! இவரின் கதை மாந்தர்கள் சமூகத்தாலும் சடங்குகளாலும் கீழ் நிலையில் வைக்கப்பட்டோர்! வருடத்திற்கொரு முறை பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே சுடு சோறு சாப்பிடகூடிய நிலையில் உள்ளவர்கள்! காலத்தின் கட்டாயத்தாலும் வயிற்றின் தேவைகளுக்காகவும் பல கட்டங்களையும் கண்டங்களையும் தாண்டி வருபவர்கள்! அவற்றில் சிலர் காலத்தை வென்று நிற்கும்படியும் மற்றோர் அதன் சூழலில் மாட்டிக் கொள்பவர்களாகவும் பல்வேறு குணாதிசயங்களுடன் நம்மிடையே வலம் வருகின்றனர்!
மின்சார பூ என்ற சற்றே பெரிய சிறுகதை பல உணர்ச்சிகளின் கலவையாக அமைந்துள்ளது! உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி சிறுவர்களிடையே வேர் விடும் ஆழமான அன்பு, எளியோரை வலியோர் நடத்தும் விதம், சிறுவர்களின் மனதில் சிறுவயதிலையே விழும் அவமான காயம், குற்றவுணர்ச்சி ஆகிய பலவற்றையும் அருமையான விதத்தில் மனதை சுடும் முடிவுடன் எழுதியுள்ளார்!
கிறுகிறுவானம்

தட்டாமாலை சுற்றி நிற்க முடியாமல் அப்படியே மயங்கி கிறங்கி மண்ணில் சரிகையில் நம் கண் முன்னே விரியும் எல்லா காட்சிகளையும் ஒழுங்குபடுத்தி கூற முடியுமா? அது போல தான் சிறுவர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களும்! ஒரு பொருளை வளர்ந்தவர்கள் பார்ப்பதற்கும் சிறுவர்களின் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன! குழந்தை பேச தொடங்குகையில் அதன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காத்திருந்து அகம் மகிழும் நம்மில் பலரும் அவர்கள் பேச தொடங்கியபின் சொல்லும் பல விஷயங்களை காது கொடுத்தே கேட்பது இல்லை! எனவே அவர்கள் கண்ணில் படும் எல்லா பொருள்களுடனும் சிநேகம் கொண்டு பேச தொடங்குகிறார்கள்!
S.ராமகிருஷ்ணனின் கிறுகிறுவானம் என்ற கதை ஒரு சிறுவன் பேசுவது போன்ற நடையில் எழுதபட்டிருக்கிறது! அவனுக்கு விருப்பமான விஷயங்களை பற்றியும், அவன் பார்வையில் இருள், மேகம் போன்ற பொதுவான விஷயங்களை பற்றியும் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்! இந்த கதையை படிக்கையில் சுஜாதாவின் பூக்குட்டி என்ற கதை நினைவில் தோன்றி மறைந்தது! ஒரு பணக்கார சிறுமிக்கு (விம்மு), சேரியில் வசிக்கும் ஒரு வறுமையில் வாடும் குடும்பத்தின் சிறுமியுடனும் (வேலாயி) அவளின் நாயிடமும்(பூக்குட்டி) ஏற்படும் பிரியமும் அது மறுக்கப்படும்போது அவளிடம் உடல் ரீதியாகவும் மனதிலும் ஏற்படும் குறைபாடுகளை மிக அருமையாக சொல்லி இருப்பார்!
சமூகத்தின் தவறான படிப்பினைகளும், சட்ட திட்டங்களும் சற்றும் பாதிக்காதது சிறுவர் சிறுமியரை தான்! நாம் போடும் சாதி மத, ஏழை பணக்கார கட்டுகள் சிறுவர்களை என்றுமே நெருங்க முடியாது! கள்ளத்தனம் இல்லாத அந்த பருவம் இன்னும் சில நாள் இருந்திருக்க கூடாதா என தோன்றும் எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை!
எஸ்.ராவின் வலைத்தளம்: http://sramakrishnan.com/
படிக்க ரசிக்க:
மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி – ரூ. 70 – கங்கா பதிப்பகம்
கிறுகிறுவானம் – எஸ். ராமகிருஷ்ணன் – ரூ. 25 – பாரதி புத்தகாலயம்
Labels:
எஸ் ராமகிருஷ்ணன்,
புத்தகங்கள்,
மேலாண்மை பொன்னுசாமி
Tuesday, January 20, 2009
32வது சென்னை புத்தக திருவிழா - 2009
வருடம் ஒருமுறை வரும் பண்டிகைகள் தான் பொங்கலும் தீபாவளியும் ஊர் திருவிழாக்களும்.. ஆயினும் ஒவ்வொருமுறையும் ஆரவாரமாக அதற்காக தயாராகிறோம் இல்லையா? வருடம் ஒரு முறை பார்த்தவற்கே அப்படி எனில் முதன்முறையாக அப்படி ஒரு அனுபவத்திற்கு தயார் ஆகுபவரின் மன நிலை எப்படி இருக்கும் என யூகிக்க முடிகிறதா?ஆம்! அப்படி தான் நான் புத்தக கண்காட்சிக்கு காத்திருந்ததும்!
யோசித்து பார்க்கையில் திருவிழாவிற்கு காத்திருந்த சிறுமி என்ற உவமை மிகவும் தவறு என்றே தோன்றுகிறது!இது அதற்கும் மேலே! மிக சரியாக சொல்வதானால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விடுமுறைக்கு வரும் என் தந்தைக்காக காத்திருந்த மனநிலையில் தான் இருந்தேன்!! மகிழ்வுடன் எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து!
தேதிகள் அறிவிக்கபடுவதற்கு முன்பே என் விருப்ப பட்டியல் தயாராகிவிட்டது! ஆங்கில புத்தகங்கள் எனக்கு நகலே போதுமானது என்பதாலும் அவற்றை moore மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம் என்பதாலும் இம்முறை தமிழ் புத்தகங்களை மட்டுமே அள்ளி வருவது என முடிவு செய்திருந்தேன்! பட்டியலை இறுதி செய்வதற்கு முன் அம்மாவிற்கும் அக்காவுக்கும் தொடர்பு கொண்டு தேர்வுகளை உறுதி செய்துகொண்டேன் ஏனெனில் பலமுறை நானும் அக்காவும் ஒரே புத்தகத்தை வாங்கியது உண்டு! அம்மாவின் விருப்பங்களுடன் பட்டியல் மெருகேறியது!
இனி தாக்குதல் தான் :)
இரு முறை கண்காட்சிக்கு செல்வது என வைத்திருந்தேன்! முதல் முறை வாங்குவதற்கு; அடுத்த முறை அனுபவத்திற்கு (இரண்டாம் முறை புத்தியை ஓரம்கட்டி மனது வென்றது 5 புத்தகங்களை ;))
கண்காட்சி - சில குறிப்புகள்:
1. பொன்னியின் செல்வன் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.. பல பிரிவுகளில் கல்கியின் புத்தகங்கள் சடுதியில் விற்று தீர்ந்தன!
2. சுய முன்னேற்ற புத்தகங்களை புரட்டுபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது!
3. வழக்கம் போலவே கண் - காட்சிக்காக (window shopping??) மட்டுமே வந்தவர்கள் கூட்டமும் அதிகம்
4. அதிக விற்பனை நடந்த பிரிவுகளாக பஜ்ஜி/போண்டா/கடலை கடைகள் அறியப்பட்டிருக்கும்.
5. ஒரே புத்தகத்தை பல முறை எடுத்த பெண்களையும், ‘இதான் நம்மகிட்ட இருக்கே da’ என்ற ஆண்களையும் காண முடிந்தது!
6. எனக்கு திசைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
குறிப்பு: என்ன புத்தகங்கள் என குறிப்பிடவே இல்லையே? என கேட்பவர்களுக்கு: நான் வாங்கிய புத்தகங்கள் அவற்றை பற்றிய விமர்சனங்கள் வரும் வாரங்களில்!!!!
யோசித்து பார்க்கையில் திருவிழாவிற்கு காத்திருந்த சிறுமி என்ற உவமை மிகவும் தவறு என்றே தோன்றுகிறது!இது அதற்கும் மேலே! மிக சரியாக சொல்வதானால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விடுமுறைக்கு வரும் என் தந்தைக்காக காத்திருந்த மனநிலையில் தான் இருந்தேன்!! மகிழ்வுடன் எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து!
தேதிகள் அறிவிக்கபடுவதற்கு முன்பே என் விருப்ப பட்டியல் தயாராகிவிட்டது! ஆங்கில புத்தகங்கள் எனக்கு நகலே போதுமானது என்பதாலும் அவற்றை moore மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம் என்பதாலும் இம்முறை தமிழ் புத்தகங்களை மட்டுமே அள்ளி வருவது என முடிவு செய்திருந்தேன்! பட்டியலை இறுதி செய்வதற்கு முன் அம்மாவிற்கும் அக்காவுக்கும் தொடர்பு கொண்டு தேர்வுகளை உறுதி செய்துகொண்டேன் ஏனெனில் பலமுறை நானும் அக்காவும் ஒரே புத்தகத்தை வாங்கியது உண்டு! அம்மாவின் விருப்பங்களுடன் பட்டியல் மெருகேறியது!
இனி தாக்குதல் தான் :)
இரு முறை கண்காட்சிக்கு செல்வது என வைத்திருந்தேன்! முதல் முறை வாங்குவதற்கு; அடுத்த முறை அனுபவத்திற்கு (இரண்டாம் முறை புத்தியை ஓரம்கட்டி மனது வென்றது 5 புத்தகங்களை ;))
கண்காட்சி - சில குறிப்புகள்:
1. பொன்னியின் செல்வன் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.. பல பிரிவுகளில் கல்கியின் புத்தகங்கள் சடுதியில் விற்று தீர்ந்தன!
2. சுய முன்னேற்ற புத்தகங்களை புரட்டுபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது!
3. வழக்கம் போலவே கண் - காட்சிக்காக (window shopping??) மட்டுமே வந்தவர்கள் கூட்டமும் அதிகம்
4. அதிக விற்பனை நடந்த பிரிவுகளாக பஜ்ஜி/போண்டா/கடலை கடைகள் அறியப்பட்டிருக்கும்.
5. ஒரே புத்தகத்தை பல முறை எடுத்த பெண்களையும், ‘இதான் நம்மகிட்ட இருக்கே da’ என்ற ஆண்களையும் காண முடிந்தது!
6. எனக்கு திசைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
குறிப்பு: என்ன புத்தகங்கள் என குறிப்பிடவே இல்லையே? என கேட்பவர்களுக்கு: நான் வாங்கிய புத்தகங்கள் அவற்றை பற்றிய விமர்சனங்கள் வரும் வாரங்களில்!!!!
Tuesday, December 30, 2008
Subscribe to:
Posts (Atom)